Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ராஞ்சி: ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள லாலுவுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு கொரோனா பாதிப்பில்லை என முடிவு வந்துள்ளது.
மாட்டுத்தீவன ஊழல் வழக்கில், பீஹார் முன்னாள் முதல்வர், லாலு பிரசாத்துக்கு(72) சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திடீர் உடல்நலன் பாதிப்பால், ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் லாலு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை முடிவில், அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என, உறுதியாகி உள்ளது. லாலுவின் உதவியாளர்கள் மூன்று பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது தெரிய வந்துள்ளது.